புதன், 27 டிசம்பர், 2017

சாகாவரம் - சோலச்சி




பரிசுக்காய்ப் பாட்டெழுதி
பார் ஏய்க்கக் கூட்டு சேர்த்து
வீணாய் நிலம் சுமக்க
பைந்தமிழே உனைத் தொட்டேன்
என நினைத்தாயோ....!

நாடி நரம்புகளில் குடியேற்றி
இரத்த நாளங்களாக்கி - தமிழே
தொழுது பாடுகின்றேன்...! - இந்த
வித்தை மறப்பேனோ..?
செத்து போவேனே...!

ஆயிரமாயிரமாய் கவிதை
அள்ளித் தருபவளே..!
அறுவை மறந்தேன்
தமிழ்ச் சுவை உணர்ந்தேன்...!

உன்னில் கலந்தேனே
உள்ளம் மலர்ந்தேனே...!

உந்தன் திறத்தாலே
அள்ளித் தந்த வரத்தாலே....

சாகாவரம் பெற்றான் சோலச்சி
சரித்திரத்தில் நிலைப்பான் கோலோச்சி.....!!!

      - சோலச்சி புதுக்கோட்டை