ஞாயிறு, 19 நவம்பர், 2017

என் தாயும் தந்தையும் -சோலச்சி



நல்லவர் என்று சொல்லுவார் என்றா
நானும் பொறந்தேன் போடி....
நானிலம் செழிக்க நான் துணையாவேன்
நம்பினால் நீ வாடி.....!

என் தாயும் தந்தையும் தரமாகத்தானே
என்னைப் பெற்று வளர்த்தாங்க
நான் தலைவனாக வேண்டுமென்றே
தினமும் பாடு பட்டாங்க....
நான் தொண்டனாகவே வாழ்ந்து மகிழ்கின்றேன்
இதுதான் உண்மை புரிஞ்சுக்கடி.....!

விவசாயம் செத்துப்போச்சு - அந்த
விளைச்சல் என்ன ஆச்சு
தரிசா கிடந்தால் கூட
வேலிக்கருவை வெளஞ்சு நிற்கும்
மண்ணும் முழுசா மனையாச்சு
மனுசன் செத்தே வாழுறான் பாரு - இத
திருத்தலேனா திருடு போகும் இந்த பாரு....!

ஆடு மாடு ஒண்ணா மேஞ்சு
குட்டி போட்டது அந்தக் காலம்
ஊசிமூலம் குட்டி வளருது
பாலும் பெருக ஊசி குத்துது....
மருந்து மூலம் எல்லாம் நடக்குது
மனித கருவும் குடுவையில் வளருது....
இயற்கையை நாசம் பண்ணுனதாலே
எல்லாம் சிதைஞ்சு நடக்குது....!

வீட்டுக்கொரு மரம் வளர்த்தால்
நாம பிழைக்கலாம் ...
இருக்கும் விளைநிலம் குளத்த
கட்டிக்காத்தா நம் சந்ததி தொடரலாம்...
இருக்கும் மரத்தை வெட்டவும் வேணாம்
செயற்கை ஆடம்பர வாழ்க்கையும் வேணாம் ...
மனசு விட்டு பேசி மகிழ்ந்தால் இன்பம் இன்பம்தான்
என் பேச்சை மறுத்து வாழ்க்கை அமைச்சா
நாளும் துன்பம்தான்....!!!

      - சோலச்சி புதுக்கோட்டை
         பேச : 9788210863

2 கருத்துகள்:

  1. அருமை
    இயற்கையைப்போற்றுவோம்

    புதுவண்டியா
    வாழ்த்துக்கள் நண்பரே

    பதிலளிநீக்கு
  2. நீண்ட நாட்களுக்கு பிறகு மேனி சிலிர்க்க ஒரு கவிதை.... அருமை அண்ணா..

    பதிலளிநீக்கு