செவ்வாய், 25 ஜூலை, 2017

அறந்தாங்கியில் பதவியேற்புவிழா மற்றும் பாராட்டு விழா

23.07.2017 ஞாயிற்றுக் கிழமை மாலை அறந்தாங்கி தி ஃபோர்ட் சிட்டி ரோட்டரி கிளபின் இரண்டாம் ஆண்டு பொறுப்பாளர்கள் பதவியேற்பு விழாவில் கவிஞர்கள் ,எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்கள், பள்ளி மாணவர்கள் என பலரும் கௌரவிக்கப்பட்டனர். புதுக்கோட்டை படைப்பாளர்களான கவிஞர்கள் வம்பன் சரபா, கவிஞர் புதுகை பூவண்ணன், கவிஞர் சுரேகா, கவிஞர் காசாவயல் கண்ணன்,  கவிஞர் துரைகுணா, கவிஞர் இந்தியன் கணேசன் இவர்களோடு நானும் பாராட்டுப் பெற்றேன். விழாவில் சிறப்பு விருந்தினராக தோழர் மதுக்கூர் இராமலிங்கம் கலந்து கொண்டார். நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த தோழர் மருத்துவர் தெட்சினாமூர்த்தி, கவிஞர் கவி.கார்த்திக், தோழர் கான், தோழர் காஜாமைதீன் மற்ற தோழர்களுக்கும்  நன்றி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக