புதன், 28 ஜூன், 2017

அறந்தாங்கி ரோட்டரி கிளப்.........

அறந்தாங்கி போர்ட் சிட்டி ரோட்டரி கிளப் ஏற்பாடு செய்திருந்த பாராட்டு நிகழ்வு மற்றும் நட்புகள் சந்திக்கும் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டேன். மனசுக்கு நிறைவாக இருந்தது. அறந்தாங்கியில் சுகாதாரத்துறையில் பணியாற்றி வரும் தோழர் மருதமுத்து அவர்கள் தான் கடந்து வந்த பாதைகள் பற்றி மிக உருக்கமாக பேசிய விதம் நெஞ்சை நெகிழ வைத்துவிட்டது. இன்றைய உறவுகளின் நிலை,  இயற்கையின் கொடை மற்றும் வாழ்வியலில் கவிதைகள் குறித்த பாதிப்பு மற்றும் ரோட்டரி கிளப்பின் சமூகப் பயன்பாடு பற்றி பேசினேன்.  நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்த தோழர் மருத்துவர் தெட்சிணாமூர்த்தி,  அருமை மாப்பிள்ளை செல்லத்துரை மற்றும் ரோட்டரி கிளப் தோழர்கள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி

ஞாயிறு, 25 ஜூன், 2017

இன்றைய 40வது வீதி இலக்கிய அமைப்பு

இன்று (25.06.2017) புதுக்கோட்டை  வீதி இலக்கிய அமைப்பில் நான் பாடிய பாடல்....

மாட்டுக்கறியோ மரக்கறியோ
அவனவன் விருப்பம்
அடுத்தவன் உணர்வுல வேட்டு வச்சா
புரட்சிதான்டா வெடிக்கும்...

மனித இரத்தமா மாட்டு மூத்திரமா
எதுடா இங்கே புனிதம்
மனிதனை வெட்டி சாய்க்கிறான்
மதத்தை தூக்கி வைக்கிறான்
செத்துப்போனதே மனிதம்....

சர்வாதிகார நாடாப் போச்சு
சாப்பிடக் கூட வரியும் விதிச்சாச்சு
சத்தியமா சொல்லுறேன்
புருசன் பொண்டாட்டி உறவுக்கு கூட
வரியும் விதிப்பான்
புள்ள வயசுக்கு வந்தாலும்
வரிதான் கேட்பான்..........

தமிழ் கன்னடம் உருது இந்தி
எப்படி மாறும் ஒரே இனமா
இந்துக்குள்ளே அடிமையாக்குறான்
இஸ்லாமை வேரறுக்குறான்
காவியால் ஆகுது ரணகளமா....

ஆணவப் போக்கு ஓங்கிருச்சு
அத அடிச்சு நொறுக்கும் காலம் வந்தாச்சு
உள்ளபடி சொல்லுறேன்
நாம மனசனாக ஒன்னா இருந்தா
மசுர புடுங்க முடியுமா
திருப்பி அடிக்க தெருவுக்கு வந்தா
அவன்தான் தொடர முடியுமா...

   - சோலச்சி புதுக்கோட்டை