வெள்ளி, 16 டிசம்பர், 2016

திமுக தலைவர் .....

              27.07.2002 அன்று சென்னை மாநகரின் முன்னாள்  மேயர் சா.கணேசன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற தமிழக கவிஞர் கலை இலக்கிய சங்கத்தின் நூல் வெளியீட்டு விழாவில் திமுக தலைவர் டாக்டர் கலைஞர் அவர்கள் பற்றி நான் எழுதி பாடிய பாடல்.....

தன்னானே தான னன்னே
தன்னே னன்ன தானானே....(2)

ஊரு உலகத்திலே உந்தன் புகழ் ஓங்குதய்யா
உத்தமி தமிழின்
உயிர் மூச்சு சிறக்குதய்யா.....

கண்ணோடு காண்பதெல்லாம்
காவியமாய் படைக்குதய்யா
கவிதையிலே உம்திறமை
கொடி கட்டி பறக்குதய்யா....

திருவாரூர் தென்றலிலே
தேனாக மிதந்து வந்தாய்
சென்னை மாநகரிலே
சிறப்போடு வாழ்ந்து வாராய்.... (தன்னா..)

இலக்கியங்கள் எத்தனையோ
உந்தன் விரல்கள் தீண்டியது
இவ்வுலகில் உந்தன் சேவை
இமயத்தையே தாண்டியது....

சொல்லிவிட நாட்களில்லை
சொல்லத்தானே வார்த்தையில்லை
அய்யாவே உங்களை அன்பு
உள்ளங்கள் மறப்பதில்லை ... (தன்னா...)

         - சோலச்சி புதுக்கோட்டை

       (நான் எந்த அரசியல் கட்சியையும் சாராதவன். பாராட்டும் போது பாராட்டுவதும் , தவறு என்று தெரியும் நேரத்தில் தைரியமாக சுட்டிக்காட்டவும் ஒருபோதும் தயங்க மாட்டேன். ஈழத்தமிழர்களுக்காக சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்த போது முன்னாள் முதல்வர் அவர்களை பாராட்டியதும் பல நேரங்களில் சுட்டிக்காட்டியதும் குறிப்பிடதக்கது.)

    விரைவில் நலம் பெற மனதார வாழ்த்துகிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக