புதன், 16 நவம்பர், 2016

எங்கும் இல்லாத.... - சோலச்சி

எங்கும் இல்லாத புதுமை
இன்று
என்னுள் வந்ததென்ன...!

விழிகள் நான்கும் ஒன்றாய்
பூவே
வேடிக்கை பார்ப்பதென்ன...!

மழைத்துளி மேகம்
என்மேல்
மோகம் கொண்டதென்ன...!

எதிரே பூத்த மலரே
நீதான்
வானில் தோன்றிய
விண்மீனோ...!

புதிராய் என்னில்
கணக்கு போட்டாய்
விடையும் நீதானோ...!

காதல் ஓடம்
மிதக்கிறது
உன்னைக் கண்டு
மனம் இனிக்கிறது ....!

              - சோலச்சி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக