வியாழன், 6 அக்டோபர், 2016

தோட்டக்கலைப்பண்ணை........

இன்று காலை எம்பள்ளியிலிருந்து களப்பயணமாக குடுமியான்மலை தோட்டக்கலைப் பண்ணைக்குச் சென்றோம். களப்பயணத்தை தலைமை ஆசிரியர் தமிழ்த்திரு. எஸ்.நாகலெட்சுமி அவர்கள் தொடங்கி வைக்க, எனது தலைமையில் மாணவர்களுடன் இலந்தை மரக் காடு வழியாக பயணித்தோம்.  தண்டை மரம், சப்போட்டா தோப்பு, மா வகைகள், பலதரப்பட்ட மர வகைகள், விதை உற்பத்தி,  பதியம் போடுதல், ஒட்டு வகை உற்பத்தி , மூலிகைப் பண்ணை, மூங்கில் பண்ணை, காய்கறித் தோட்டம் என பலவாறு    தோட்டக்கலைப் பண்ணையை சுற்றிப் பார்த்தோம். அங்கு பணியாற்றும் தோட்டக்கலை அலுவலர் தோழர் ராஜசேகர் அவர்கள் மாணவர்களுடன் கலந்துரையாடி மாணவர்களின் சந்தேகங்களுக்கு பதிலளித்தார்.  மாணவர்கள் அவ்வப்போது குறிப்பெடுத்துக் கொண்டனர். பலன் தரும் மரக்கன்றுகளை பெற்றுக்கொண்டு இனிதே விடைபெற்றோம். மரக்கன்றுகளை பள்ளியில் நட்டு மேலும் சுற்றுச்சூழல் பாதுகாக்கப் போகிறோம்.

நீங்களும் ஒருமுறை குடுமியான்மலை  தோட்டக்கலைப் பண்ணைக்கு வந்து செல்லுங்களே......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக