முகநூல் வலைப்பூ தோழர்கள் அனைவருக்கும் ஓர் அன்பான வேண்டுகோள் .....
சமீபகாலமாக மூகநூல் பதிவுகள் பலவற்றையும் தொடர்ந்து வாசித்து வருகின்றேன். தோழர்கள் பலர் கவிதை, குறுங்கதை, சமூகம் மேம்பாடு சார்ந்த பதிவுகள், கண்டனக்குரல்கள், அனுபவங்கள் என பலவாறு எழுதி வருவதை காண்கின்றேன். பலரிடம் எழுத்தாற்றல் சொல்லாற்றல் அழகாய் விளையாடுவதை உணர்கின்றேன். முகநூலில் எழுதிவிட்டு அப்படியே விட்டுவிடாமல் அதை நூலாக வெளியிடுங்கள் என்பதுதான் என் அன்பான வேண்டுகோள்.
நீங்கள் எழுதும் எழுத்துகள் இந்த சமூகத்திற்கு பயன்படும் என்று எதை உணர்கின்றீர்களோ அதை நூலாக்குங்கள். உங்கள் வாழ்வில் ஏற்பட்ட ஓர் அனுபவ பதிவு கூட மற்றவருக்கு பாடமாக அமையலாம்.
நாம் திருடர்கள் அல்ல : வந்த தடம் தெரியாமல் செல்வதற்கு. தடம் பதியுங்கள் தோழர்களே.
என்னைப்பொறுத்தவரை ஒவ்வொருவரும் ஒரு நூலாவது எழுதி வெளியிட வேண்டும் என்பதுதான்.
துணிவோடு எழுதுங்கள் தோழர்களே. தடைகளை தகர்ப்போம்... தலை நிமிர்வோம்..!
- நட்பின் வழியில்
சோலச்சி, புதுக்கோட்டை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக