சனி, 20 ஆகஸ்ட், 2016

எங்கள் பாசமிகு கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்கள் - சோலச்சி

பெருமை கொள்கிறோம் ...

"நான் என்ற அகந்தை இல்லாத மனிதர்
நானிலத்தில் நான் கண்ட புனிதர் ...!

நண்பர் வைகறையின் குடும்பத்திற்கு
வாழ்வு தந்தவர்....!

சோலச்சிக்கும் அடையாளத்தை
சுகமாய் தந்தவர் ....!

இல்லையென்ற குணம் இல்லாதவர்
இருப்பதை இன்முகத்தோடு
இயலாதோருக்கு அள்ளித்தருபவர்...!

எழுந்து வரும் எழுத்தாளருக்கு
தூண்டுகோலாய் இருப்பவர்...!

மேடைகள் தோறும் தமிழ் சிறக்க செய்பவர்
மேன்மை தமிழுக்கு நூல் படைத்து மகிழ்பவர்...!

சங்கம் பார்க்காமல் சங்கமிக்கும் கவிஞர்
சரித்திரத்தில் கோலோச்சும் நற்கலைஞர்...!

பெருமை கொள்கிறோம் நாங்கள் - இன்னும்
பேரும் புகழும் அடைவீர் நீங்கள்...!

எங்கள் பெருமை மிகு கவிஞர் அய்யா தங்கம் மூர்த்தி
எப்போதும் புவியில் தங்கும் உங்கள் கீர்த்தி...!

இன்னும்  இனியன எல்லாம் பெற்று
இதமாய் வாழ வாழ்த்துகிறேன் ....
      - சோலச்சி, புதுக்கோட்டை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக