சந்திப்பின் மகிழ்வில்....
இன்று (18.08.2016) அண்ணன் இயக்குநர் தம்பி இராமையா அவர்களை அவரது வீட்டில் (அவரது ஊரில்) என் நண்பர் பொன்னையா அவர்களுடன் சந்தித்தேன். சுமார் நாற்பத்தைந்து நிமிடங்கள் பேசிக்கொண்டு இருந்தோம். கல்வி, சமூகம், இலக்கியம் சார்ந்து நிறைய பேசினோம். அண்ணன் அவர்கள் அவர்தாம் கடந்து வந்த பாதையை சொல்லும்போது திரைத்துறையில் எவ்வளவு போராட்டங்களை சந்தித்து இருக்கிறார் என்பதை உணர முடிந்தது. மிகவும் யதார்த்தமான பேச்சைக் கண்டு வியக்கிறேன். எனது நூல்களைப் பெற்றுக்கொண்டு , ஒருசில பக்கங்களைப் புரட்டிப் பார்த்துவிட்டு விரைவில் முழுவதுமாக வாசித்துவிட்டு தொடர்பு கொள்கிறேன் என்று எனது தொடர்பு எண்ணை வாங்கி தனது அலைபேசியில் பதிவு செய்து கொண்டார்கள். சென்னை வந்தா மறக்காமல் தொடர்பு கொள்ளுங்க தம்பி. "போராடுபவர்கள்தான் வெற்றி பெறுகிறார்கள். நீங்கள் வெற்றி பெறுவீர்கள் தம்பி " சொல்லிக்கொண்டே கைகுலுக்கினார்கள். மகிழ்ச்சியை தெரிவித்துக்கொண்டு விடைபெற்றோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக