புதன், 20 ஜூலை, 2016

தலித் வன்கொடுமை (குஜராத்)

"குஜராத் மாநிலத்தில் பசுத்தோல் வைத்திருந்ததாக கூறி மூன்று இளைஞர்களை வன்கொடுமை செய்த சாதிய இந்து வெறியர்களை வன்மையாக கண்டிக்கிறேன். மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து வேடிக்கை பார்ப்பது வேதனை அளிக்கிறது.  தலித் சமூகம் பாதுகாப்போடு வாழ வேண்டும் என்பதற்காக அண்ணல் அம்பேத்கர் அவர்கள் பல சட்ட திருத்தங்களை அப்போதைய ஆங்கில அரசிடம் கோரிக்கையாக வைத்தார். ஆனால் அந்த சட்டங்களை கொண்டு வரக்கூடாது என்று பலமுறை உண்ணாவிரதம் இருந்து தடுத்துவிட்டார் திரு.காந்தி அவர்கள். இந்த உண்மை எத்தனை பேருக்கு தெரியும்.  ஆங்கிலேயர்கள் தலித்துகளை அங்கீகரித்து கௌரவ படுத்தினர். ஆனால் இங்கு வாழும் சாதிய இந்துக்கள் தீண்டத்தகாதவர்களாக இன்று வரை நடத்தி வருகின்றனர். "

"இவனுகதான் என்னமோ கடவுளோட நேரடி செகரெட்டரி னு நெனப்பு "

   கடவுளே இல்லனு சொல்றவன் கத்திய தூக்கி எவனையும் வெட்டுறதும் இல்ல, கலவரமும் பண்றதில்ல. கடவுள் இருக்குனு சொல்றவனாலதான் சாதி கலவரம்,  மத கலவரம் , வெட்டு குத்து எல்லாம் நடக்குது. இவனுகள எந்த கடவுள் அவரோட ஆபிசுல மேனேசரா போட்டாருனு தெரியல. "

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக