ஞாயிறு, 19 ஜூன், 2016

19.06.2016 வீதி கலை இலக்கிய கூட்டம்

புதுக்கோட்டையில் நேற்று நடைபெற்ற வீதி கலை இலக்கிய கூட்டத்தை சிறப்பாக நடத்திய தோழர் கவிஞர் மணிகண்டன் அவர்களுக்கும் கவிஞர் மீனாட்சிசுந்தரம் அவர்களுக்கும் என் நெஞ்சம் நிறைந்த பாராட்டுக்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

   விழாவில் நிறைய நிகழ்வுகள் நடைபெற்றது. அதில் குறிப்பிடத்தக்க நிகழ்வு நூல் அறிமுகம். "நீல நிலா காலாண்டிதழ் " மற்றும் "கந்தகப் பூக்கள் " ஆகிய இரண்டு இதழ்களையும் அறிமுகம் செய்து பேசினேன். கந்தகப் பூக்கள் இதழானது கவிஞர் வைகறை நினைவிதழாக வெளி வந்தது.  நினைவிதழ் கொண்டு வந்த அதன் ஆசிரியர் கந்தகப்பூக்கள் ஸிரிபதி அவர்களுக்கு நன்றி.

      அகிலத்தையே தனது கவித்துவத்தால் ஆளவேண்டிய கவிஞன் அட்டைப் படத்தில் நினைவு இதழாக வந்ததை எண்ணி மனம் சற்றே கனத்துவிட்டது.....

இனி ஒவ்வொரு வீதி இலக்கிய கூட்டத்திலும் சோலச்சியின் இதழ் அறிமுகம் தொடரும்....  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக