புதன், 11 மே, 2016

மைத்துனர் வைகறைக்கு...... - சோலச்சி

எழுதத்தொடங்குகின்றேன்
ஏறி அமர்ந்து கொள்கின்றன
உன் நினைவுகள்...

உன் காலடிபட்ட
தார்ச்சாலைகளும்
உருகி வழிகின்றன...

மணல் பாதைகள்
புழுதிகளை வாரி தூற்றியபடி
புலம்புகின்றன....

நாம் பேசி நின்ற
மரம் செடி கொடிகள்
வாடி வதங்குகின்றன....

சொல்லித்தான்
சந்தித்துக்கொண்டோம்....

சொல்லாமல்
சென்றுவிட்டாய்...

உன் வலிகளை
தாங்கமுடியாமல்தான்
வான மேகத்துக்கும்
காய்ச்சல்
நெருப்பாய் கொதிக்கிறது...

என்னவனே.....
கண்ணீரால் வாடுவது
நான் மட்டுமல்ல ...

நானிலமும்தான்.....!

       - சோலச்சி
        புதுக்கோட்டை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக