"என்னுள் வாழும் உன்னை
எப்படிச் சொல்வேன்
விழிகள் பறித்து
வலிகள் தந்தாய் என்று....!
ஊராருக்கு தெரியுமா
நம் உணர்வுகள்.....!
கபாலம் போல்
பாதுகாப்பது நீதானே....!
சென்ற இடமெல்லாம்
சென்று பார்க்கிறேன் ...!
செதுக்கிய சிலை போலவே
சிரித்து அழைக்கிறாய்...!
இப்போதெல்லாம்
விழிகள் மூடியே
விழித்து இருக்கின்றேன்....!
அப்போதுதானே
விரல்கள் தீண்டி
விளையாட முடியும்....!"
- சோலச்சி
புதுக்கோட்ட
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக