நெகிழ்ச்சி .......
இன்று வழக்கம் போல் எழுந்து சமையல் செய்வதற்கு காய்கறி நறுக்கிக்கொண்டு இருந்தேன். எதிர்பாராத விதமாக கத்தி விரலை பதம் பார்த்து விட்டது. இரத்தம் வழிந்து கொண்டு இருப்பதைக்கண்ட என் சின்ன மகன் (ஆதவன்)......
"அப்பா வெரல சப்புப்பா... வெரல சப்புப்பா... " என்று சொல்லிக்கொண்டே எனது விரலை எடுத்து சப்பச் சொன்னவன், அவனது வாயால் ஊதிவிட்டான்.
நெகிழ்ந்து போன எனக்கு வலி காணாமல் போய்விட்டது .....
சின்னவனாக நான் இருந்தபோது விளையாடும்போது தடுமாறி விழுந்துவிட்டேன். இடது முழங்காலில் சிராய்ப்பு ஏற்பட்டுவிட்டது. "கண்ண பொடனிலய வச்சுருக்க பாத்து வெளையாட வேண்டியதுதானே. தெங்கனதன திரிஞ்சா இப்புடித்தான் " என்று சொல்லிக்கொண்டே என் அம்மா என் முதுகில் அவரது கைவரிசையை காட்டியது (தர்ம அடி கொடுத்தது) நினைவுக்கு வர சிரித்துக்கொண்டேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக