............!!!!
ஒத்தக்கடைனா
முத்து டீ கடைதான்
முனுக்குனு வரும் ...
நாலு மணிக்கெல்லாம்
நாற்பது பேரு
கூடிடுவாங்க...
விடிவதற்குள் மனுசனுக
நாலஞ்சு டீ
குடிச்சுடுவாங்க...
கதிரவன்
விழிப்பதற்குள்
கழனியில் கால்
பதிச்சுடுவாங்க....
உச்சந்தலை
சுடும்போதுதான்
ஒருபிடி சோறும் நீரும்
குடிப்பாங்க...
மகிழ்ச்சியாத்தான்
போச்சு...
இப்ப மாறிப்போச்சு...
உழுது நட்ட இடத்தில்
ஊர் பல
முளச்சுருச்சு...
டீ குடிச்ச
இடம் கூட
தெரியல...
அந்த இடமும்
ஆள் உயர மேடாச்சு...
அடி விடாமல்
வண்டி போக
நூறடி சாலையாச்சு.....!
- சோலச்சி
புதுக்கோட்டை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக