வியாழன், 17 செப்டம்பர், 2015

கோயில்கள் வாழ்க - சோலச்சி

"என் தாய் அவ்வப்போது
கோயிலுக்கு அழைத்துப்போவாள்
இறைவழிபாட்டுக்கு அல்ல...
இலவச உணவை
உண்டு மகிழ..!
நான் இறைவனை
வணங்குவதைவிட - நல்ல
இதயங்களைத்தான்
அதிகம் வணங்குவதுண்டு..!
இல்லாமல் இருப்போருக்கு
இருப்பதை கொடுப்போரை
தடுக்காதே..!
தோழா...
நேயம் கொண்டால்
நீதான் இறைவன்..!
நியாயம் கண்டால்
நீதான் தலைவன்..!"
-சோலச்சி
புதுக்கோட்டை

1 கருத்து: